சென்னை:
மிழக கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் 11 விதிமுறைகளை மாணவர்கள் பின்பற்ற அறிவுறுத்தும்படி சுற்றறிக்கை  அனுப்பி உள்ளது.
school-education
இந்த விதிமுறைகள் பள்ளிகளில் பின்பற்றப்படுகிறதா என்பதை  முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலை கல்வி பயிலும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய  ஒழுக்க நடைமுறைகள்  பற்றி பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.  இதை மீறும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டு  உள்ளது.
கல்வித்துறையின் 11 விதிமுறைகள்:  
* காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வந்து சேர வேண்டும்.
* லோ ஹிப், டைட் பிட் ‘பேன்ட்’கள் அணிந்து வர அனுமதி இல்லை.
* அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். சட்டையை இறுக்கமாக அணியக்கூடாது
* மாணவர்கள் அணியும் சட்டை நீளம் ‘டக் இன்’ செய்யும்போது வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும்.
* சீரற்ற முறையில் ‘இன்’ பண்ண கூடாது. கறுப்பு கலர் சிறிய ‘பக்கிள்’ கொண்ட பெல்ட் மட்டுமே அணிய வேண்டும்.
* கை, கால் நகங்கள், தலை முடி சரியான முறையில் வெட்டப்பட (போலீஸ் கட்டிங்) வேண்டும்.
* மேல் உதட்டை தாண்டாதவாறு மீசை இருப்பது அவசியம். முறுக்கு மீசை வைத்திருந்தால் கடும் நடவடிக்கை பாயும்.
* கைகளில் ரப்பர் பேண்டு, கயிறு, கம்மல், கடுக்கன், செயின் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது.
* பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியர் அனுமதி பெற்றுத்தான் விடுமுறை எடுக்க வேண்டும்.
* பைக், செல்போன், ஸ்மார்ட் போன் கொண்டு வர அனுமதி இல்லை. மீறினால் பறிமுதல் செய்யப்படும். திரும்ப ஒப்படைக்கப்பட மாட்டாது.
* பிறந்த நாள் என்றாலும் மாணவர்கள் சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டும்.
இவ்வாறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில்,  மாணவர்களின் ஒழுக்க நெறி முறைகளை கடைபிடிக்க செய்வதில்  பள்ளிகளுக்கும், ஆசிரிய பெருமக்களும் பெரும்பங்கு உண்டு.
இந்த  11 விதிமுறைகள் குறித்து பள்ளிகளில் பேனர் வைக்கவும், துண்டு பிரசுரங்கள் மூலமும், பெற்றோரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.