சென்னை: தமிழகத்தில் புதியதாக 1,819 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:  தமிழகத்தில் புதிதாக 1,819 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.  16,441 பேர் சிகிச்சைப் பெற்று வர, புதியதாக 2,520 பேர் குணமடைந்தனர். இதையடுத்து ஒட்டு மொத்தமாக கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,30,272 ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் 5 பேர், தனியார் மருத்துவமனைகளில் 7 பேர் என மொத்தம் 12 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். ஒட்டு மொத்தமாக, பலி எண்ணிக்கை 11,478 ஆக அதிகரித்து உள்ளது. புதியதாக 64,213 பேருக்கு பரிசோதனை செய்யப்பட, மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 1,07,91,896 ஆக உள்ளது.

தலைநகர் சென்னையில் மட்டும் இன்று 502 பேருக்கு கொரோனா தொற்று  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 28வது நாளாக ஆயிரத்திற்கும் குறைவாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.