சென்னை: தமிழகத்தில் தீபாவளி தினத்தில் 106 தீ விபத்துகள் நடந்துள்ளதாக  தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தீயணைப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் தீபாவளி நாளில் 106 தீ விபத்துகள் நேரிட்டுள்ளன. அவற்றில், ராக்கெட் வெடியால் ஏற்ப்டடது 84 தீ விபத்துகள் என்றும், மற்ற பட்டாசுகளால் 22 விபத்துகளும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் 40 இடங்களில் பட்டாசுகள் வெடித்ததன் காரணமாக தீ விபத்து நிகழ்ந்து உள்ளது.  அவற்றில்,  ராக்கெட் வெடியால் 33 தீ விபத்துகளும், மற்ற பட்டாசுகளால் 7 விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.

தீ விபத்துகளில் 90 சதவீதம் மாலை 7 மணியில் இருந்து இரவு 10 மணிக்குள் நேரிட்டுள்ளதாகவும்,  தீ விபத்து குறித்து 57 தொலை பேசி அழைப்புகள் வந்துள்ளதாகவும்  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.