சென்னை

ன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை  அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளார். 

நேற்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டு இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் புதிய தலைவர் நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.

இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சென்னை அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.