சீர்காழி

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளிடையே தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.  மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்த்து இந்தியா என்னும் பெயரில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணி தற்போது உடைந்துள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

எடப்பாடி பழனிச்சாமி,

“வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தேசிய கட்சிகளுடன் அ.தி.மு.க. கூட்டணியில் இல்லை.  எங்களுக்குச் சிறப்பான தேர்தல் கூட்டணி அமையும். அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தைக்கு வரும் தமிழகக் கட்சிகள் குறித்து விரைவில் தகவல் தெரிவிக்கப்படும்.” 

என்று கூறினார்.