சென்னை

மிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 3 வருடம் ஆனதையொட்டி மறைந்த திமுத தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தி உள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதையொட்டி மே மாதம் 7-ந் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்று அவருடன் புதிய அமைச்சரவையும் பொறுப்பு ஏற்றுக் கொண்டது.

பிறகு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த வாக்குறுதிகள் நிறைவேற்றும் பணியைத் தொடங்கி கடந்த 3 ஆண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட முக்கியமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கிய்அமாக 1 கோடியே 15 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று, தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டு முடிந்து  4 ஆம் ஆண்டு தொடங்குவதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தி உள்ளார்.

பிறகு எ சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கும், தலைமைச் செயலகத்துக்கும் சென்றார். அப்போது அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள், தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க இருக்கின்றனர்.