சென்னை

மிழக புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர் என் ரவிக்கு முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநரான பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராகக் கூடுதல் பொறுப்புக்களை வகித்து வந்தார்.  அவரை பஞ்சாப் ஆளுநராக நியமித்த குடியரசுத் தலைவர் தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர் என் ரவி யை நியமித்தார்.  இவர் நாகாலாந்து ஆளுநராகப் பதவி வகித்தவர் ஆவார்.

பீகார் மாநிலத்தில் பாட்னாவில் பிறந்த ஆர் என் ரவி உஇ முழு பெயர் ஸ்ரீ ரவிந்திர நாராயண் ரவி ஆகும்.  இவர் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்ரு பத்திரிகைத்துறையில் சிறிது காலம் பணியாற்றி உள்ளார்.  கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரி ஆகி 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணி செய்த பிறகு மத்திய அரசுப்பணிகளுக்கு மாற்றப்பட்டார்.

இவர் நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் உளவுத்துறையில் பணியாற்றியவர் ஆவார்.  கடந்த 2012 ஆம் வருடம் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தேசியப் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான நிகழ்வுகள் குறித்த தனது அனுபவங்களை பற்றிக் கட்டுரை எழுதி உள்ளார். கடந்த ஆகஸ்ட் 1 முதல் நாகாலாந்து ஆளுநராக பணியாற்றிய ரவி தற்போது தமிழக ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது டிவிட்டரில், “தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும். தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும். தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]