சென்னை

நாளை மறுநாள் ஜி 20 மாநாட்டையொட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் டில்லி செல்கிறார் .

வரும் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் டில்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் அமெரிக்க அதிபர் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். தவிர ஐரோப்பிய  யூனியன் மற்றும் சர்வதேச அமைப்பின் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

டில்லி நகர் இதையொட்டி விழாக்கோலம் பூண்டுள்ளது.  வரும் செப்டம்பர் 9 ஆம்தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சார்பில் வழங்கப்படும் இரவு விருந்தில் பல்வேறு நாட்டு அதிபர்களும், உள்நாட்டுத் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

குடியரசுத் தலைவரின் விருந்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். இதையொட்டி நாளை மறுநாள் (சனிக்கிழமை) டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த விருந்தில் பங்கேற்பதாக ஏற்கனவே தெரிவித்துள்ளார்.