சென்னை

நாளை முதல் 10 ஆம் தேதி வரை வார விடுமுறையையொட்டி 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 

வரும் 9 ஆம் தேதி அன்று 2-ம் சனிக்கிழமை மற்றும் 10-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு 8-ந்தேதி சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 8-ந்தேதி (நாளை) தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 600 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

, ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாகப் பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது.  இதுவரை இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்காக 9 ஆயிரத்து 299 பயணி கள் முன்பதிவு செய்துள்ளனர்.