சென்னை: மதுசூதனன் மனைவி காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் மனைவி ஜீவா மதுசூதனன் உடல்நலக்குறை ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு அதிமுக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார். இது குறித்து தனது ட்விட்டரில் அவர் தெரிவித்து உள்ளதாவது:

கழக அவைத் தலைவர் மரியாதைக்குரிய மதுசூதனன் மனைவி திருமதி. ஜீவா மதுசூதனன் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

ஜீவா மதுசூதனன் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.