சென்னை

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

தமிழகத்தில் பிரபல வழக்கறிஞர்களில் சண்முக சுந்தரமும் ஒருவர் ஆவார்.  கடந்த  1989-1991ல் திமுக ஆட்சியில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராக சண்முகசுந்தரம் பணியாற்றினார். பிறகு 1996 முதல் 2001 வரை மாநிலத் தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராகப் பதவி வகித்த இவர் 2002 முதல் 2008 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.

திமுக கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் அரசு தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார்.அவர் தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.. தமது தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவியில் இருந்து விலகுவதாகத் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.

தமது ராஜினாமா முடிவை ஏற்கனவே தமிழக அரசிடமும், முதல்வரிடமும் சண்முகசுந்தரம் தெரிவித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சண்முக சுந்தரம் அரசு பொறுப்பில் இருந்து விலகி தனியாக வழக்கறிஞர் தொழிலைத் தொடர உள்ளதாகக் கூறப்படுகிறது.