சென்னை

மிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் வரும் ஏப்ரல் 6 முதல் மே 10 வரை நடைபெற உள்ளது.

தமிழக சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் நடந்து முடிந்துள்ளது.   கொரோனா காரணமாக வெகு நாட்களாக கலைவாணர் அரங்கில் நடந்த சட்டசபை கூட்டத்தொடர் இந்த நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் மூலம் மீண்டும் தலைமைச் செயலகத்தில் நடந்தது.

இந்நிலையில் இன்று அடுத்த சட்டசபைக் கூட்டத்தொடர் குறித்து அலுவல் ஆய்வுக் கூட்டம் இன்று நடந்தது.  தமிழக தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த கூட்ட த்தொடருக்குச் சபாநாயகர் அப்பாவு தலைமை  தாங்கி உள்ளார்.

அப்போது அடுத்த கூட்டத் தொடர் வரும் ஏப்ரல் 6 முதல் மே 10 ஆம் தேதி வரை நடைபெறும் என தீர்மானம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.    இந்த கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.