சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால்,  மின் கட்டணம் செலுத்த மே 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள் மின் கட்டணம், இதர நிலுவைத்தொகை செலுத்த மே 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்த கடைசி நாள் மே 10 முதல் 24ம் தேதி வரை இருப்பின் மே 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், அபராதம் இன்றி, மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்குமாறு, மின் வாரியத்தற்கு, நுகர்வோர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் தமிழக அரசு அவகாசம் அளித்து நடவடிக்கை எடுத்துள்ளது.