சென்னை: 
மிழகத்தின் 5 மாவட்டங்களில்  அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு  உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் மாறும்.  இதனால் தமிழகத்தின் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.