சென்னை

டுத்த 2 மணி நேரத்துக்குத் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் மேலும் வலுவடைந்து வருகிறது.  இதனால் சென்னை உள்ளிட்ட பல தமிழகப் பகுதிகளில் மீண்டும் கனமழை தொடங்கி உள்ளது.   இந்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 2 மணி நேரத்துக்குத் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.