திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் துளசி மட்டுமே பயிரிடப்படுகிறது.

 

மகாவிஷ்ணுவின் பூஜைக்கு அதிகம் உகந்தது துளசியாகும்.

ஸ்ரீ கிருஷ்ணரின் கதையில் கிருஷ்ணருக்குச் சமமாக ஒரு துளசி இலை மட்டுமே தராசில் நின்றதாகச் சொல்வதுண்டு.

துளசி என்பது  பெருமாள் கோவிலின் முக்கிய  பிரசாதமாகும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரின் முக்கிய விவசாயமே துளசி ஆகும்.

அந்த ஊரில் துளசி மட்டுமே பயிரிடப்படுகிறது.

தினமும் காலை  அந்த கிராம வாசிகள் துளசி இலைகளைப் பறித்து திருப்பதிக்கு  அனுப்புகின்றனர்.

அப்படிப் பறிக்கும் போது அவர்கள் விஷ்ணு ச்கஸ்ரநாமத்தை பாராயணம் செய்தபடியே பறிக்கின்றனர்.

அந்த தெய்வீகக் காட்சியைக் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

இதோ நமது வாசகர்களுக்காக அந்த வீடியோ

[youtube https://www.youtube.com/watch?v=MWvUHB8XZYQ]