தேனி:
நாளை மது வாங்க வருபவர்கள் குடையுடன் வர வேண்டும் என்று தேனி மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதில் தேனி மாவட்டத்தில் உள்ள 93 கடைகளில் மது வாங்க வரும் மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக ஒவ்வொரு வரும் குடை கொண்டு வர வேண்டும் என மாவட்ட காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு மது வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.