சென்னை: அதிமுக அமைச்சர் தங்கமணி பராமரித்த நிலைமை இதுதான்  என  படத்துடன் அமைச்சர் செந்தில்பாலாஜி டிவிட் பதிவிட்டு உள்ளார்.

தமிழகத்தில் மின்தடை ஏற்பட காரணம் அணில்தான் என்று விளக்கம் அளித்த தமிழன மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, சர்ச்சையானதைத் தொடர்ந்து படத்துடன் புதிய விளக்கம் அளித்தார். அவரது விளக்கத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிமுகவில் ஒரு செல்லூர் ராஜூ, திமுகவில் ஒரு செந்தில்பாலாஜி என ஒப்பிட்டு மீம்ஸ்கள் இணையதளங்கள கலக்கி வருகின்றன.

இந்த நிலையில், தற்போது அமைச்சர் செந்தில்பாலாஜி, சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்வாரிய பில்லர்களின் நிலை குறித்த படத்தை வெளியிட்டு டிவிட் பதிவிட்டுள்ளார்.

அவரது டிவிட்டில், சட்டப்பேரவையில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்  எடப்பாடி பழனிச்சாமியிடம், ‘கடைசி 9 மாதங்களில் பராமரிப்புப் பணிகளைச் செய்தீர்களா? இல்லையா?’ என ஒரேயொரு கேள்வியைக் கேட்டேன். பதில் இல்லை!  சென்னை லாயிட்ஸ் சாலையில் கூட, அப்போதைய மின்துறை அமைச்சர் தங்கமணி  பராமரித்த நிலைமை இதுதான். பிறகு எப்படி பதில் இருக்கும்? னஎன பதிவிட்டுள்ளார்.