திருப்பாவை –9ஆம் பாடல்

ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார்.   இந்த 30 நாட்களும் அவர் தன்னுடன் நோன்பு இருக்க தனது தோழிகளை அழைப்பது போல் பாடிய பாடல்கள் திருப்பாவை ஆகும்.

இன்று நாம் திருப்பாவை 9 ஆம் பாடலைக் காண்போம்

திருப்பாவை 9 :

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழ துயிலணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன் மகள்தான்
ஊமையோ? அன்றி செவிடோ? அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்

 

பொருள் :

தூய்மையான மணிகளைக் கொண்ட மாடத்தில் எங்கும் விளக்குகள் எரிய,வாசனைப் புகை மணக்கும் படுக்கையில் கண் உறங்கும் மாமன் மகளே!

மணிகள் பதிக்கப்பட்ட கதவின் தாழ்ப்பாளை திற!
மாமி!அவளை எழுப்புகிறீர்களா ?

நாங்கள் இவ்வளவு நேரம் அழைத்தும் அவள் பதில் ஏதும் சொல்லவில்லையே ஏன் ?உங்கள் மகள் ஊமையா?செவிடா ?எல்லை சோம்பேறியா ?அல்லது ஏதோ மந்திரத்தால் மயக்கம் அடைந்து இன்பமாகப் பேர் உறக்கம் கொண்டாளா ?

பெரிய மாயக்காரனானை ‘மாமாயன்’ என்றும், தாயும் தந்தையும் ஆன ‘மாதவன்’ என்றும்,
வைகுந்த வீட்டுக்குத் தலைவனான ‘வைகுந்தன்’ என்றும் அவன் நாமங்கள் பலவற்றை நாவால் சொல்லி மனதில் நிறுத்தி கொள்வோம் வா பெண்ணே!