சென்னை

மிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறையில் தார் கொள் முதலில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் இன்று தமிழ்நாடு அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது :

’தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் தார் கொள்முதலில் ரூ. 1000 கோடி ஊழல் நடந்துள்ளது.  இந்த ஊழல் பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இந்த அ தி மு க அரசு மக்கள் நலனை முன்னேற்றுவதில் கவனம் செலுத்துவதில்லை.   ஆனால் ஊழல் செய்வதில் அக்கறை காட்டுகிறது.   இந்த ஓ பி எஸ் – ஈ பி எஸ் ஆகிய இருவரும் இந்த ஊழல் ஆட்சியை தக்க வைக்க பல முயற்சிகளை மேற்கொள்கிறது.   அதற்கு மத்திய பா ஜ க அரசும் துணை போகிறது.   இந்த ஊழல் குறித்து சி பி ஐ விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் விரும்புகிறது” என திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.