ஸ்ரீ கருணாகரப் பெருமாள் – திருகாரகம்
மூலவர் : கருணாகரப் பெருமாள்
தாயார் : பத்மாமணி நாச்சியார்
கோலம் : நின்ற கோலம்
விமானம் : வாமன விமானம்
தீர்த்தம் : அக்ராய தீர்த்தம்
மங்களாசனம்: திருமங்கை ஆழ்வார்
ஊர் : காஞ்சிபுரம்
மாவட்டம் : காஞ்சிபுரம், தமிழ்நாடு
108 திவ்ய தேசங்களில் இத்தலம் 52 வது திவ்ய தேசமாகும் . தொண்டை நாட்டு திவ்ய தேசமாகும் .
உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளே இருக்கின்ற திவ்ய தேசமாகும். இக்கோயின் வரலாறு சரியாகச் சொல்லப்படவில்லை.  கார்க முனிவர் செய்த தவத்தால் இறைவன் திருக்காட்சியைக் காட்டி அருளியதாகக் கருதப்படுகிறது.
இதன் மூலம் திருகாரகம் என்ற பெயர் பெற்றியிருக்கலாம் இன்று நம்பப்படுகிறது . அக்காலத்தில் பெரிய மண்டபங்களுடன் கூடிய பெரிய கோயிலாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் திருமங்கையாழ்வார் ‘உலகமேத்தும் காரகத்தாய் ‘ என்ற மங்களாசனம் மூலம் தெரிகிறது .
ஆதிசேஷன் குடை பிடிக்கப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.  காஞ்சியின் மீது பகைவர்கள் படையெடுத்தபோது இக்கோயில் அளிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது .அழிவுற்ற கோயிலின் இறைவனைத் திருமேனியை மட்டும் இக்கோயிலில் சன்னதி அமைத்து வழிபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது .
செல்லும் வழி:
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் அருகிலேயே உலகளந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது.