சென்னை: ராகவன் வீடியோ நிறைய பார்த்துட்டோம்… அப்பாவி பெண்களை நினைத்தால்தான் பாவமா இருக்கு என  நடிகை கஸ்தூரி வேதனை தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

மாநில பாஜக பொதுச்செயலாளராக இருந்து வந்த வழக்கறிஞர் கே.டி.ராகவன் தொடர்பான ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்து, சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்று வாய்ச்சவடால் வெளியிட்டுள்ர்.

ராகவனுக்கு எதிராக  சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். இந்த நிலையில், பிரபல நடிகையும் சமூக ஆர்வலருமான நடிகை கஸ்தூரியும் விமர்சித்து  டிவிட் பதிவிடுள்ளார்.

அதில்,  “இத்தனை நாளு ஒரு TV debate கூட முழுசா பாக்கல. இன்னிக்கு சேர்த்து வச்சு எக்கச்சக்கமா பாத்துட்டோம்! தம்பதி சமேதரா ஒரு interview இப்போ வைரல்… அதுக்கு கமெண்ட்ஸ் தெரிச்சுக்கிட்டு இருக்கு. இந்த கண்ராவியில் சிக்கி பொதுவெளியில் விவாதிக்கப்படும் அப்பாவி பெண்களை நினைத்தால்…” என்று பதிவிட்டுள்ளார்.