சென்னை:
சென்னையில் கொரோனா தொற்றால்,  தனிமைப்படுத்தப்பட்டு வரும் 233  தெருக்களில்  7 தெருக் களில் நாளைமுதல் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துஉள்ளது.
இந்த தெருக்களில் கடந்த   28 நாட்களாக எந்தவொரு கொரோனா தொற்றும் பதிவாகவில்லை என்பதால்,  இந்த ஏழு கட்டுப்பாட்டு மண்டலங்கள் நாளை கட்டுப்பாடுகளிலிருந்து நீக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி
5வது மண்டலத்தில் 56வது டிவிஷனில் மதுரவாய் தெரு, 57வது டிவிஷனில் டேவிட்ஷன் தெருக்கள்.
9வது மண்டலத்தில் 112வது டிவிஷனில் வரதராஜன்பேட்டை (சூளைமேடு)
106வது மண்டலத்தில் 139 டிவிஷனில் வேணுகோபால் தெரு (சைதாப்பேட்டை)
13வது மண்டலத்தில் 172வது டிவிஷனில் எல்லம்மன் கோவில் தெரு (கோட்டூர் புரம்)
14வது மண்டலத்தில் 184வது டிவிஷனில் நேரு தெரு, கல்குட்டை, பெருங்குடி,
15வது மண்டலத்தல் 198வது டிவிஷனில் எம்ஜிஆர் நகர், பனையூர்
இந்ததெருக்களில் நாளை முதல் தனிமைப்படுத்தப்பட்டு வரும்  கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது.