சென்னை:
மிழகத்தில் புதிதாக 203 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 2,256 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
தமிழகத்தில் புதிதாக 203 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்ச மாக சென்னையில் இன்று ஒரேநாளில் 176 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு 1,082 ஆனது.
தமிழகத்தில் கொரோனாபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2526 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒருவர் உயிரிந்த நிலையில், உயிரிழப்பு 28 ஆக உயர்ந்துள்ளது.
அதே வேளையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1258 ஆக உயர்ந்துள்ளது.