பழனி :

ழனி மலை முருகன் கோயில் அருகே அப்பர் தெருவில் உள்ள ஒரு திரையரங்கின் உரிமையாளர் நடராஜன் நில தகராறு காரணமாக இரண்டு பேர் மீது துப்பாக்கியால் சுட்டார்.

துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த இருவரும் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திரையரங்கம் அருகில் உள்ள தனது 12 சென்ட் இடத்திற்கு வேலி போட சென்ற விவசாயி இளங்கோவன் மற்றும் அவரது உறவினர்கள் பழனிச்சாமி, சுப்பிரமணியம் ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டார் நடராஜன்.

தகராறு செய்த நடராஜன் திடீரென்று தான் வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தார், இதில் பழனிச்சாமி மற்றும் சுப்பிரமணியம் ஆகிய இருவரும் குண்டடிபட்டு படுகாயமடைந்தனர்.

குண்டடிபட்டவர்களை இளங்கோவன், உடனடியாக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தார், அங்கு அவரின் உறவினர்கள் கூடியதும் அந்த இடமே பரபரப்பானது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தப்பியோடிய நடராஜனை கைது செய்த போலீசார், விசாரணைக்காக அழைத்துச்சென்று உள்ளனர்.

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறி இருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது, அது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது.