சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. கடைசி நாள் அமர்வான இன்று  பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப் பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி அன்று தொடங்கியது. அன்றைய தினம் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,  2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை காலை  9.30 மணியளவில் தாக்கல் செய்தார். தமிழக பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் இடம்பெற்றன. இதையடுத்து மார்ச் 15ந்தேதி வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில் பட்ஜெட்டை எத்தனை நாட்கள் கூட்டுவது என்பது தொடர்பாக அலுவல் ஆய்வு குழு கூடி,  பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பட்ஜெட்டுகள் மீதான விவாதங்கள் நடைபெற்று முடிந்ததும், மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு மாதமாக துறை வாரியான மானிய கோரிக்கை விவாதங்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தன. நேற்று  (ஏப். 28) காவல்துறை  மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். மேலும் அரசு ஊழியர்களுக்கும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இநத் நிலையில்,   பேரவையில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்து அறிவிப்புகளை வெளியிடுகிறார். தொடா்ந்து, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன. அதற்கு அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.