சென்னை: தமிழகம் முழு​வதும் 77 மாவட்ட அமர்வு நீதிப​தி​களை இடமாற்​றம் செய்து உயர் நீதி​மன்ற மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீப காலமாக கீழமை நீதிபதிகள்,  அரசியல்வாதிகளின் வழக்குகளை சரிவர விசாரிக்காமல், அவர்களை வழக்கில் இருந்து விடுவித்து வரும்  நிலையில், அந்த உத்தரவுகளை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து மீண்டும் விசாரணைக்கு உத்தரவிடுவதும்  தொடர்கதையாக உள்ளது. சமீபத்தில் திமுக அமைச்சர்கள் பலர்மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளை விசாரித்த மாவட்ட நீதிபதிகள், அவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்த உத்தரவுகள் மீண்டும் உயர்நீதிமன்ற விசாரணையில் ரத்து செய்யப்பட்டு வந்ததும், பேசும்பொருளாக மாறியது. மேலும், கீழமை நீதிபதிகள் குறித்து சமூக வலைதளங்களில் கேள்விகளும் எழுப்பப்பட்டு வந்தன.

இந்த நிலையில்,  தமிழகம் முழு​வதும் 77 மாவட்ட அமர்வு நீதிப​தி​களை இடமாற்​றம் செய்து உயர் நீதி​மன்ற தலை​மைப் பதி​வாளர் எஸ்​.அல்லி உத்​தர​விட்​டுள்​ளார். அதன் விவரம் வருமாறு:-

அரசு சொத்​தாட்​சி​யர் மற்​றும் நிர்​வாக அறங்​காவல​ராக பதவி வகித்த மாவட்ட நீதிபதி டி.லிங்​கேஸ்​வரன், மயி​லாடு​துறை மாவட்ட நீதிப​தி​யாக​வும்,

சென்னை தொழிலா​ளர் தீர்ப்​பா​யம் நீதிபதி டி.சந்​திரசேகரன், செங்​கல்​பட்டு மாவட்ட முதன்மை நீதிப​தி​யாக​வும்,

ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி பி.​முரு​கேசன், சென்னை 8-வது சிபிஐ நீதி​மன்ற நீதிப​தி​யாக​வும், அ

ங்கு பணிபுரிந்த நீதிபதி எஸ்​.ஈஸ்​வரன், சென்னை 9-வது சிபிஐ நீதி​மன்ற கூடு​தல் அமர்வு நீதிப​தி​யாக​வும் மாற்​றப்​பட்​டுள்​ளனர்.

சென்னை 2-வது பெருநகர கூடு​தல் நீதிபதி எஸ்​.தஸ்​னீம், திரு​வள்​ளூர் மாவட்ட முதலா​வது கூடு​தல் அமர்வு நீதிப​தி​யாக​வும்,

சென்னை 16-வது பெருநகர கூடு​தல் அமர்வு நீதிபதி எல்​.ஆபிர​காம் லிங்​கன்,  ஸ்ரீவில்​லிபுத்​தூர் மகளிர் நீதி​மன்ற நீதிப​தி​யாக​வும்,

செங்​கல்​பட்டு மாவட்ட கூடு​தல் அமர்வு நீதிபதி கே.​கா​யத்​ரி, வேலூர் விரைவு நீதி​மன்ற நீதிப​தி​யாக​வும்,

சென்னை 5-வது குடும்​ப நல நீதி​மன்ற நீதிபதி எஸ்​.​காஞ்​ச​னா, திரு​வண்​ணா​மலை போக்​சோ வழக்​கு​களை விசா​ரிக்​கும் சிறப்பு நீதிப​தி​யாக​வும்,

கோவை மாவட்ட 3-வது கூடு​தல்அமர்வு நீதிபதி எஸ்​.பத்​மா, சென்னை போக்​சோ சிறப்பு நீதிப​தி​யாக​வும் இடமாறு​தல் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இதே​போல், செங்​கல்​பட்டு குடும்​பநல நீதி​மன்ற நீதிபதி எஸ்​.மலர்​விழி, பூந்​தமல்லி வெடிகுண்டு வழக்​கு​களுக்​கான சிறப்பு நீதி​மன்ற நீதிப​தி​யாக​வும்,

அங்கு பணிபுரிந்த நீதிபதி கே.எச்​.இளவழகன், கரூர் மாவட்ட அமர்வு நீதிப​தி​யாக​வும்,

அங்கு பணிபுரிந்த மாவட்ட நீதிபதி ஆர்​.சண்​முகசுந்​தரம், சென்னை மாவட்ட முதலா​வது கூடு​தல் (தடா) அமர்வு நீதிப​தி​யாக​வும்,

அங்கு பணிபுரிந்த கூடு​தல் நீதிபதி கே.கீதா ராணி, சென்னை பெருநகர மூன்​றாவது கூடு​தல் நீதிப​தி​யாக​வும் இடமாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

சென்னை மாவட்ட முதலா​வது கூடு​தல் (தடா) அமர்வு நீதிபதி ஆர்​.கே.பி.தமிழரசி, 4-வது கூடு​தல் அமர்வு நீதிப​தி​யாக​வும்,

அங்கு பணிபுரிந்த நீதிபதி வி.​பாண்​டி​ராஜ் 6-வது கூடு​தல் அமர்வு நீதிப​தி​யாக​வும்,

அங்கு பணிபுரிந்த நீதிபதி எஸ்​.​முரு​கேசன், 7-வது கூடு​தல் அமர்வு நீதிப​தி​யாக​வும் இடமாறு​தல் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இதே​போல் தமிழகம்​ முழு​வதும்​ 77 அமர்​வு நீதிப​தி​கள்​ இடமாற்​றம்​ செய்​யப்​பட்​டுள்​ளனர்​.

..