சென்னை,

மிழகத்தில் சென்னையில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், ஆனால் பரவலாக மழைக்கு வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே தான் கூறியிருந்ததைப் போல, அனைவரும் மழைக் கோட் மற்றும் குடைகளை கையில் எடுத்து வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

சென்னை நகரம் முழுவதுமே பரவலாக அவ்வப்போது மழை பெய்யும். இது கன மழையாக இருக்காது.  ஆனால் 5 முதல் 15 நிமிடம் வரை பெய்யலாம்.

அதாவது, சூரியன் வெளிச்சத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் போதே திடீரென மேகங்கள் சூழ்ந்து மழை பெய்யும். சில நிமிடங்கள் நீடிக்கும். திடீரென மழை நின்றுவிடும். சூரியன் எப்போதும் போல மீண்டும் வந்து தனது பணியை செய்யும்.

இங்கொன்றும், அங்கொன்றுமாக மழை பெய்யுமே தலர பரவலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

இவ்வாறு அவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.