அரியலூர்:
நிறுத்தப்பட்ட பேருந்து போக்குவரத்தை தொடங்கி வைத்ததுடன், பேருந்தை இயக்கி பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

அரியலூர் – ஆனந்தவாடி இடையில் நிறுத்தப்பட்ட பேருந்து போக்குவரத்தை தொடங்கி 500 மீட்டர் பேருந்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இயக்கியுள்ளார். இதுகுறித்து வெளியான வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.