நீலகிரி,

நீலகிரி மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சர்வமங்கலம் இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில், திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்ட நீதிபதியாக சர்வமங்கலம் பொறுப்பு வகித்தபோது, ஒரு வழக்குரைஞருக்கு கையூட்டு கொடுத்து வழக்கை திசை திருப்ப முயற்சித்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டிருந்தது.

அந்த வழக்கின் அடிப்படையில் சர்வமங்கலம் இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.