IMG-20160709-WA0004
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு தலைமை காவலர் நாகராஜ் ( வயது 40) விழுப்புரத்தில் உள்ள தனியார்  விடுதியில் விஷ ஊசி  போட்டு தற்கொலை  செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர்  உடற்கூறு ஆய்வுக்காக நாகராஜ் உடலை, விழுப்புரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சைபர் கிரைமில் பணியாற்றி வந்த நாகராஜ்,  6 மாதங்களுக்கு முன் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குடும்ப தகராறா அல்லது பணி நெருக்கடி காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டாரா என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.