சென்னை:
திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு; புதிய திட்டங்களுக்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. .

இரண்டாம் ஆண்டு துவக்கத்தை “உழைப்பு தொடரும்” என்ற பெயரில் அறிக்கையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு, தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளை இன்று வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.