Inmate murder case: 2 guards arrested

சென்னை:
விசாரணை கைதி கொலை வழக்கில் 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் காவல்துறையினரின் வாகன சோதனையின்போது தகராறு ஏற்பட்ட கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதி விக்னேஷ் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இவரது மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினர் தாக்கியதால்தான் அவர் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது.

ஆனால், விக்னேஷ் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்படடது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் தலைமை செயலக காலனி நிலைய எழுத்தர் முனாஃப், காவலர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.