சென்னை

பாமக சார்பில் தங்கர் பச்சான் கடலூரில் போடுவதை உறுதி செய்துள்ளார்.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதற்கான பேச்சுவார்த்தை பல கட்டங்களாக நடைபெற்றுக் கடந்த 2 நாட்களுக்கு முன் நிறைவு பெற்றது.

இதில் பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. நேற்று முன்தினம் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இன்று பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் தொகுதி வேட்பாளராக இயக்குநர் தங்கர் பச்சான் அறிவித்திருந்தனர்.

கடலூர் தொகுதியில் தங்கர் பச்சான் போட்டியிட மறுப்பதாகவும், அவரது விருப்பம் இல்லாமலே அவரது பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்னும் அதிகாரப்பூர்வமற்ற தகவல் பரவி வந்தது.

தங்கர் பச்சான் தனது எக்ஸ் பக்கத்தில்,

“கடலூர் மக்களவை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் நான், போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறான பொய்ச் செய்தியை வெளியிட்டவர்கள் யார் எனக் கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்”

எனப் பதிவிட்டுள்ளார்.

அது மட்டுமின்றி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உடன் இருக்கும் படத்தையும் அவர் வெளியிட்டு, தான் பா.ம.க. சார்பில் கடலூரில் போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார்.