சென்னை:
மிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிபுரிவதற்கான, டெட் என்ற தகுதி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படுகிறது.

முதல் தாள் தேர்வு, இன்று முதல் 20ம் தேதி வரை, கணினி வழியில் நடக்கிறது. இந்த தேர்வுக்கு, 2.30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வு முதல் முறையாக கணினி வழியில் நடத்தப்படுகிறது. தினமும், 32 ஆயிரம் பேர் வீதம், 300க்கும் மேற்பட்ட மையங்களில் நடக்கிறது.

இதற்காக, தனியார் பள்ளி, இன்ஜினியரிங், கலை, அறிவியல் கல்லுாரிகளில் உள்ள கணினி வகுப்புகள், தேர்வு மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. காலை, பிற்பகல் என, இரண்டு பிரிவுகளாக தேர்வர்களுக்கு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முறைகேடு இன்றி தேர்வு நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியம், பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.