சேலம்: குடும்பத்தகராறு காரணமாக மனைவி, மாமியார்  மீது ஆசிட் வீசிய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிட்டால் பாதிக்கப்பட்ட அவரது மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேலம் அருகே நாமக்கல் மாவட்டம் வையப்பமலை பகுதியைச் சேர்ந்த சேர்ந்தவர் ஆராயி (வயது 65).  சம்பவத்தன்று ஆராயி தனது  தனது மகள் ரேவதி (வயது 47) உடன் சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து தங்களது ஊருக்கு செல்லும் பேருந்தில் அமர்ந்தனர். அப்போது, திடீரென அங்கு வந்த ரேவதியின்  கணவர் இயேசுதாஸ், ரேவதி மீது ஆசிட் ஊற்றி விட்டு தப்பிச்சென்றார். இதில் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டார். அவரது அருகில் இருந்த அவரது அம்மா ஆராயி மீது ஆசிட் பட்டது. இதனா அவரும் படுகாயம் அடைந்தார். உடனே, அங்கிருந்தவர்கள்  அவர்கள் இருவரையும் மீட்டு  சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த சேலம் டவுன் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரேவதி, ஆராயி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, ரேவதிக்கும், சேலம் குகை பகுதியைச் சேர்ந்தவர் இயேசுதாசுக்கும் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பே  திருமணம் ஆனதாகவும், அவர்களுக்கு 4 பிள்ளைகள் உள்ளதாகவும் அவரது ரேவதியின் தாயார் ஆராயி தெரிவித்துள்ளார்.

ரேவதியின் கணவர் யேசுதாஸ் சேலம் குகை ஜவுளிக்கடை பஸ் நிறுத்தம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், சேலம் மாநகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் ஊழியராக பணியாற்றி வருகிறார். குடும்பத்தகராறு காரணமாக, ரேவதி, யேசுதாஸ் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்ததால், பிரிந்து வாழ முடிவு செய்து,  சேலம் வழக்கறிஞர் பேச்சுவார்த்தை நடத்தி இருவரும் பிரிந்து செல்ல முடிவெடுத்தனர். இதையடுத்து மீண்டும் ஊருக்கு செல்வதற்காக மாலை 5.30 மணி அளவில் தாயுடன், ரேவதி சேலம் பழைய பஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு அவர்கள் பஸ்சுக்காக ராசிபுரம் வழித்தடத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போதுதான்  யேசுதாஸ், திடீரென எங்கள்மீது  ஆசிட் வீசிவிட்டு சென்றுள்ளார்.

இதைடுத்து யேசுதாஸை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரம் காட்டினர். இதில், ஒரு இடத்தில் பதுங்கியிருந்த யேசுதாஸ் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.