சென்னை:
மிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ரூ2600 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

செங்குன்றம் அருகே பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி கோயிலில் தீமிதி திருவிழாவை துவக்கி வைத்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, தமிழ்நாடு முழுவதும் ரூ2600 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்ட தமிழக கோயில்களுக்கு சொந்தமான 852 சாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.