சென்னை

ன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலினைத் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி சந்தித்தார்.

சிரஞ்சீவி தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார்.  இவரைப் பலரும் மெகா ஸ்டார் என அழைக்கின்றனர்.   தெலுங்கு திரையுலகில் பல பிரச்சினைகளுக்கு இவர் முன்னின்று தீர்வு கண்டுள்ளார்.   நடிகர் சிரஞ்சீவி தற்போது லூசிபர் மலையாளப்படத்தின் தெலுங்கு பதிப்பில் நடித்து வருகிறார்.

இவர் இன்று அதாவது செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று சென்னை வந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலினைச் சந்தித்துள்ளார்.  இந்த சந்திப்பில் அவர்களுடன் சேப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக இளைஞர் அணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.

இந்த சந்திப்பு குறித்து சிரஞ்சீவி தனது டிவிட்டரில்,”நான் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.   அவர் கட்சிகளைத் தாண்டி எடுத்துள்ள சில பயனுள்ள முயற்சிகள் மூலம் சிறந்த அரசியல் தலைவராக உயர்ந்துள்ளார்.

இந்த கொரோனா கால கட்டத்தில் அவர் மக்களின் தலைவராகவும் தொலைநோக்கு பார்வையுடனும் அர்ப்பணிப்புடனும் சிறப்பாக ஆட்சி அளித்து வருகிறார்.  இதற்காக நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார்.