சென்னை:
தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு எளிய முறையில் இ-பாஸ் வழங்கும்படி அறிவுறுத்தப்படும் என தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்து  இருந்தார். இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்க லாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தமிழகத்தில்  ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும்  +1 தேர்வுகள் ஜூன் மாதம்  நடைபெறும்  என அமைச்சர் செங்கோட்டையன்  அறிவித்தார்.
அதன்படி, 10-ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையும், + 1 வகுப்பு ஒத்தி வைக்கப்பட்ட  தேர்வு ஜூன் 2-ம் தேதியில் நடத்தப்படும். அதேபோல,  தேர்வு எழுத முடியாமல் போன +2 மாணவர்களுக்கு ஜூன் 4-ம் தேதி தேர்வு நடைபெறும் என தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படும் என்றும்,  தனியார் பள்ளி விடுதிகளில் தங்கி படித்து வரும் மாணவர்களை 3 நாட்களுக்கு முன்பு அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும், அவர்களுக்கு உணவு வசதி செய்து தரப்படும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் சில  மாணவர்கள்  வெளி மாவட்டத்தில் உள்ள நிலையில்,  அவர்கள் எளிதாக  தேர்வு எழுதும் இடங்களுக்கு திரும்பும் வகையில், தமிழக அரசு இந்த அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மேலும், தனியார் பள்ளி விடுதிகளில் தங்கி படித்து வரும் மாணவர்களை 3 நாட்களுக்கு முன்பு அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளி மாவட்டங்களில் சிக்கியுள்ள  ஆசிரியர்களும்  இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.