சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளை குறிப்பிட்ட சில நாட்களில் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகஅரசு அறிவிப்பானை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. பின்னர் வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, மாநிலம் முழுவதும்  ஏப்ரல் 4 முதல் 6-ம் தேதி வரை 3 நாட்கள்  டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.