சென்னை:
கடந்த மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வின் உத்தேச விடைகள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழக அரசு நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வை கடந்த மாதம் நடத்தியது. ஜூன் 8, 9ந்தேதிகளில் நடைபெற்ற இந்த தேர்வுகள் தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 1,552 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடை நிலை ஆசிரியர் பணிக்கான முதல் தாளை 1 லட்சத்து 83 ஆயிரத்து 341 பேரும், இரண்டாம் ளை எழுத 4லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் விண்ணப்பித்து தேர்வுகளை எழுதியிருந்தனர்.
இந்த நிலையில், தற்போது, ஆசிரியர் தகுதித் தேர்வின் உத்தேச விடைகளை , ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான http://trp.tn.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், விடைகளில் ஆட்சேபனை இருப்பவர்கள், உரிய ஆதாரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் முறையிடலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்வு எழுதியவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.