சென்னை:

சென்னை வண்ணாரப்பேட்டை அருகே நேற்று நடைபெற்ற சிஏஎக்கு எதிரான போராட்டத்தின்போது, காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள்  கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில் காவல்துறையினர் அவர்களை தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இந்த நிலையில், இஸ்லாமிய பெரியர் ஒருவர் இறந்ததை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்காகம் அமைப்பு, அந்த பெரியர் காவல்துறையினர் தடியால் இறந்ததாக போஸ்டர் ஒட்டி, இஸ்லாமிய மக்களிடையே காவல்துறையினருக்கு எதிரான போக்கை தூண்டி வருகிறது.

இந்த நிலையில், காவல்துறையினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

அதில்,  இது ஒரு பொய்யான செய்தி: இந்தப் பெரியவர் இறந்ததற்கும், CAA போராட்டத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை, இந்த போராட்டத்தின் போது யாரும்  என்று விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களை காவல்துறையின்ர இரவு விடுதலை செய்தனர். இதைத் தொடர்ந்து, இஸ்லாமியர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.