சென்னை:

மிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய நவநீதகிருஷ்ணன் 2013-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து புதிய தலைமைச் செயலகக் கட்டட விவகாரம் தொடர்பாக பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆஜராகி தமிழக அரசுக்கு ஆதரவாக தீர்ப்பைப் பெற்றுத் தந்த ஏ.எல்.சோமையாஜி, அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த (2016) வருடம் ஆகஸ்ட் மாதம், இவர் தமது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து புதிய தலைமை வழக்கறிஞராக முத்துக்குமாரசாமி நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தனது உடல் நிலையைக் காரணம் காட்டி முத்துக்குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இவரது திடீர்  ராஜினாமா அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.