சென்னை: பொது இடத்தில் ஐந்து பேருக்கு மேல் கூடினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும்  கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பின்பற்றப்பட்டு வரும் ஊரடங்கு உத்தரவு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,526 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 176 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இந்நிலையில் தமிழகத்தில் 144 தடை உத்தரவு முறைகளை எக்காரணத்தை கொண்டும் மீறக்கூடாது. பொது இடத்தில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது. அப்படி கூடினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.