சேலத்தில் ஏர்போர்ட் போல அதிநவீன பஸ்போர்ட் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

சேலம் இரும்பாலைக்கு செல்லும் புதிய மேம்பால திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். ரூ.21.97 கோடி செலவில் இந்த புதிய மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதே போன்று சேலம் மாவட்டத்தில் துவங்கப்பட உள்ள ரூ.103.28 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:
“சேலம், மதுரை, கோவையில் ஏர்போர்ட்டை போல பஸ் போர்ட் அமைக்கப்படும்.  முதற்கட்டமாக சேலத்தில் பஸ்போர்ட் அமைக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார்” என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.