சென்னை: “தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது”  என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இன்று வள்ளுவர் தினம் தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள வள்ளுவர் சிலைக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரையாதை செலுத்தினார். அதுபோல ஆளுநர் ஆர்.என்.ரவி காவி உடையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்திருந்தார். ஆளுநரின் இந்த செயல், திமுக உள்பட திராவிட கட்சியினர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் – முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் – அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர். 133 அடியில் சிலையும் – தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது. குறள் நெறி நம் வழி! குறள் வழியே நம் நெறி! என குறிப்பிட்டுள்ளார்.

திருவள்ளுவர் தினம்: காவி உடை திருவள்ளுவர் படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை