சென்னை:
மிழ்ப்புத்தாண்டு, மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சித்திரை முதல் நாளான இன்று ‘பிலவ’ வருடம் விடைபெற்று ‘சுப கிருது’ புத்தாண்டு பிறந்தது. அதிகாலை முதலே கோயில்களில் சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்
பண்பாடு, மரபு, செழுமையான பாரம்பரிய அடையாளங்களின் பெருமைகளை பறைசாற்றும் விழா தமிழ்ப்புத்தாண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.