சென்னை:

அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததே தமிழகத்தில் பாஜக தோல்வியடைந்ததற்கு காரணம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி கூறியிருக்கிறார்.


சென்னை வந்த பாஜக மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான சுப்பிரமணியன்சாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததே பாஜக தோல்விக்கு காரணம்.
தனித்து நின்றிருந்தால் பாஜக வெற்றி பெற்றிருக்கும். தேர்தலுக்கு முன்பே இதை நான் சொன்னேன்.

மாவட்ட வாரியாக பொதுக்கூட்டம் போட வேண்டும். அங்கிருந்து வேட்பாளர்களை தேர்வு செய்யவேண்டும்.

இதை எல்லாம் தேர்தலுக்கு முன்பே செய்திருக்க வேண்டும். இதை எல்லாம் செய்ததால் தான் மேற்கு வங்கத்தில் பாஜக இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

தனித்து நின்று கொள்கையை சொன்னால், தமிழக மக்கள் ஆதரிப்பார்கள்.

தமிழகத்தில் பாஜக தலைவர்கள் சரியில்லை. டெல்லியிலிருந்து வரும் தலைவர்களுக்கு ஓட்டல்களில் தங்க வைப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். ஜால்ரா போடுபவர்கள் தான் இருக்கிறார்கள் என்றார்.