சென்னை:

காவிரி விவகாரத்தில் தமிழக உரிமை நிலை நாட்டப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அறிக்கை ஒன்றை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
அதில், ‘‘- காவிரி விவகாரத்தில் தமிழக உரிமை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய அரசின் மனுவை நிராகரிக்கும் வகையில் வாதிடுமாறு வக்கீல்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. காலக்கெடு முடிந்த பின் திட்டம் என்ன? என மத்திய அரசு கேட்டிருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது’’ என்று தெரிவித்துள்ளார்.