சென்னை:
“தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள்” என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜ்பவன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் என ஆளுநர் வலியுறுத்தினார். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.